போடி: எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதால், அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ேதனி மாவட்டம், போடி அருகிலுள்ள குரங்கணி, பிச்சங்கரை, அடகுமுறை, பெரியாற்று கோம்பை, மல்லிப்பட்டி, முத்துக்கோம்பை, முந்தல் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் எலுமிச்சை சாகுபடி நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சைக்கு தனி சுவையுண்டு. இதனால் இப்பகுதியில் விளையும் எலுமிச்சைக்கு மார்க்கெட்களில் தனி கிராக்கி உண்டு. மாவட்ட அளவில் போடியில் மட்டும் எலுமிச்சை விற்பனைக்கு தனி மார்க்கெட் உள்ளது.