புதுச்சேரி: புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்கும் மையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணம் இல்லாத 74 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் ரோமண்ட் ரோலன்ட் வீதி என்ற பகுதி முக்கிய நகரமாக பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் வெளிநாட்டவர் வந்து செல்லும் வகையில் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களை ஈர்க்கும் வகையில் கலைப்பொருட்களை விற்கும் மையங்களும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை அலுவலகம் எதிரில் உள்ள தனியார் கட்டிடத்தில் கலைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. இப்பொருட்களை காண வரும் பார்வையாளர்கள் பலர், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல சிலைகள் கலைப்பொருட்கள் விற்கும் மையத்தில் இருப்பதாக தமிழக அரசுக்கு புகார் தெரிவித்தனர்.