சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட் 19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது செப்டம்பர் 22 அன்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.