தூத்துக்குடி: தூத்தக்குடி மாவட்டம் தட்டார்மடத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 17ம் தேதி இளைஞர் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டார். நெல்லையில் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. இந்த கொலை வழக்கில் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். தூத்துக்குடி அருகே தட்டார்மடத்தில் நிலத்தகராறு காரணமாக கடந்த 17ஆம் தேதி செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.