திருப்பூர்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்கப்பட்டுள்ளார். கர்ணனை கடத்திச் சென்ற கும்பல் தளி பகுதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். கர்ணனை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணனை மர்ம நபர்கள் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளராக கர்ணன் இருந்து வருகிறார். இவர் இன்று காலை 11 மணியளவில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அன்சாரி வீதியிலுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்தார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.