நெல்லை: நெல்லையில் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. சொக்கன்குடியிருப்பை சேர்ந்த இளைஞர் செல்வன் நிலத்தகராறில் கடத்திக் கொலை செய்யப்பட்டார், இந்த கொலை வழக்கில் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பில் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி செல்வம் என்பவர் மர்மகும்பலால் காரில் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரத்தின் பின்னணியில் அதே பகுதியில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் ஹரிகிருஷ்ணனுக்கும் சம்பந்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகவும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.