டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர். திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.