கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 72,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 37,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று 50,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீராடவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: