சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சய்பிரதீப் (32). இவர் அதே ஊரில் டிஆர்ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சட்ட விரோதமாக பேன்ஸி ரக வெடிகளையும் தயாரித்துள்ளனர். இங்கு 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று காலை காட்டுப்பகுதியில் பட்டாசு தயாரித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறின.