மஞ்சூர்: கொரோ னா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாத தனியார் தேயிலை மற்றும் காளான் தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2,700கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குபின் குணமடைந்து வீடு திரும்பினாலும் தினசரி நோய்த்தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளது. கட்டாய முககவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கடைகள், வனிக வளாகங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சானிடைசர், காய்ச்சல் கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.