சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைந்து நடத்தும் Connect 2020 மாநாட்டில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கையைான தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020-ஐ வெளியிட்டார். இந்த கொள்கை இணைய பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும். மேலும், ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழ்நாடு எளிதாக எய்திட இயலும்.