திருவள்ளூர்: திருவள்ளூர் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக நகர, ஒன்றிய செயலாளர்கள் சி.சு. ரவிச்சந்திரன், மோ.ரமேஷ், ச.மகாலிங்கம், நகரமன்ற முன்னாள் தலைவர் பொன்.பாண்டியன், ந.பிரசன்னகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கவரப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் பெரியாரின் 142 வது பிறந்த நாளையொட்டி திருவுருவ படத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.