போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், டாமோ மக்களவை தொகுதி எம்பி.யும், மத்திய கலாசாரத் துறை அமைச்சருமான பிரகலாத் படேலுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர் பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவு நேற்று முன்தினம் இரவு வந்தது. இதில், அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து பிரகலாத் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள்,’ என குறிப்பிட்டுள்ளார்.