புதுடெல்லி: ‘வேலைவாய்ப்பு என்பது கவுரவமாகும். இதனை எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு மறுத்து வரும்?’ என ராகுல் காந்தி கேட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். தற்போது, தனது தாயும் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியின் மருத்துவ பரிசோதனைக்காக அவருடன் அமெரிக்கா சென்றுள்ளார். எனினும், டிவிட்டரில் அரசை விமர்சித்து தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை சூழல் நிலவி வருவதால் இளைஞர்கள் இன்றைய நாளை தேசிய வேலையின்மை நாளாக அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் கவுரமாகும்.