தமிழக முதலமைச்சருக்கு 144 தடை பொருந்தாதா? டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக தலைவர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியின்போது, அரசு பிறப்பித்திருக்கும் அத்தனை நோய் தடுப்பு விதிமுறைகளையும் மீறும் வகையில் முதலமைச்சர் நடந்துகொண்டிருக்கிறார். அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள். மேம்பால திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொலி காட்சி வழியாக நடத்திட முடியாதா, படிப்பது ராமாயணம் இடிப்பது பொருமாள் கோயில் என்பது போலல்லவா இருக்கிறது முதலமைச்சரின் இந்த செயல்பாடு. அதிகாரம் தரும் தடுமாற்றத்தில் போடும் இந்த ஆட்டங்களை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். அவர்களுக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Related Stories: