பெங்களூரு: கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம் தொடர்பாக இதுவரை கன்னட நடிகை ராகிணி, சஞ்சனா கல்ராணி உள்பட 11 பேரை கைதாகியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் 34க்கும் அதிகமான அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களின் மகன்கள், நடிகர், நடிகைகள் பெயர்களை கூறியுள்ளனர். அவை அனைத்தையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக வைத்துள்ள நிலையில் ஒவ்வொருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொழும்பு கேசினோ நிகழ்ச்சியில் கணவன் திகந்த்துடன் கலந்து கொண்ட கன்னட நடிகை ஐந்திரிதா ராய் சி.சி.பி அலுவலகத்தில் கணவனுடன் ஆஜரானார். இவர்களிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று அவர்களை போலீசார் அனுப்பிவைத்தனர்.