லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30 -ம் தேதி லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. உபி மாநிலம் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது. சிபிஐ தரப்பில் 350 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு, 600 பக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இம்மாத இறுதிக்குள் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்துள்ளது.