பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட கறவை மாடு கடனை கேட்டு அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஒகளூர் கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சிறு, குறு மேம்பாட்டுக்காக 70 பயனாளிகளுக்கு கறவை மாடு வாங்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதிமுக தேர்தல் வாக்குறுதியின் படி இந்த கடனை தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டது. கடனை செலுத்திய நிலையில் மானியம் செய்யப்பட்டதாக கூறிய விவசாயிகள் இப்போது அதற்கு வட்டியும் கேட்டு நோட்டீஸ் வந்திருப்பதாக கூறினர்.