பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

சென்னை: சமக நிறுவனர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர்களில் 58 வயது நிறைவடைந்து ஓய்வு பெற்றவர்கள் தவிர, தற்போது சுமார் 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்திட தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

Related Stories: