சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான இறுதி பருவத்தேர்வு வரும் 24ம் தேதி ஆன்லைன் வழியாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.பொறியியல் படிப்புகளுக்கான இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் 11, 12 மணி முதல் 1, 2 மணி முதல் 3 மற்றும் 4 மணி முதல் 5 மணி வரை என நான்கு வேளைகளாக நடத்தப்படும். 1 மணி நேரம் நடைபெறும் தேர்வில் கேட்கப்படும் 40 கேள்விகளில் மாணவர்கள் 30 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது.