டெல்லி : பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், கொரோனா ஊரடங்கால் நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார, பொருளாதாரத் தாக்கம், சீனா உடனான எல்லைப் பிரச்சனை ஆகியவை இக்கூட்டத் தொடரில் முக்கியப் பிரச்சினைகளாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கொரோனா பரவலை தடுப்பதில் தோல்வி, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை தொடர்பாக அவ்வப்போது மத்திய அரசின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி விமர்சனம் செய்து வருகின்றனர்.