தெலுங்கானா: தெலுங்கானா-சட்டீஸ்கர் எல்லையில் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஒரேநேரத்தில் நதியை தாண்டி செய்வது தொடர்பான, டிரோன் கேமரா பதிவு காட்சிகள் பொதுமக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்குள் மாவோயிஸ்டுகள் நுழைவதை தடுக்க கண்காணிப்பை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதாவது, தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு அவ்வப்போது தகவல் கிடைத்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து போலீசார் 4 மாநிலங்களில் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு ஈடுபடும்போது, ஒடிசா மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 மாவோயிஸ்டுகள் உயிரிழந்த நிலையில், 2 போலீசாரும் உயிரிழந்தனர்.