காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த புத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன் (38). விவசாயக் கூலி. இவரின் 7 வயது பெண்குழந்தை கடந்த 10 ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் ரஞ்சித் (22), சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்துள்ளார். உடனே வந்த குழந்தையை அருகில் உள்ள முட்புதருக்கு அழைத்துச் சென்று அந்தக் குழந்தைக்கு பாலியல் வன்முறை செய்துள்ளார். அதன்பிறகு இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளார்.