7 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை: இளைஞர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த புத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன் (38). விவசாயக் கூலி. இவரின் 7 வயது பெண்குழந்தை கடந்த 10 ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் ரஞ்சித் (22), சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்துள்ளார். உடனே வந்த குழந்தையை அருகில் உள்ள முட்புதருக்கு அழைத்துச் சென்று அந்தக் குழந்தைக்கு பாலியல் வன்முறை செய்துள்ளார். அதன்பிறகு இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சோர்வாக இருந்த குழந்தையைப் பார்த்து பெற்றோர் கேட்டதற்கு ரஞ்சித் முட்புதருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தந்தை சின்னப் பையன் நேற்று மாகறல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மாகறல் போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பாதிப்புக்குள்ளான குழந்தையை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Stories: