புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சரியான முறையில் மத்திய அரசு கொரோனா விவகாரத்தை கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வியாழன்று பேசுகையில், ‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கொரோனாவுக்கு எதிராக திட்டமிட்டு போராடி வருகிறது,’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில், இக்கருத்தை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கொரோனாவுக்கு எதிரான மோடி அரசின் திட்டமிட்ட போராட்டமானது நாட்டை படுகுழியில் தள்ளியுள்ளது என தெரிவித்துள்ளார்.