மாணவி ஜோதிஸ்ரீ தற்கொலை முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

சென்னை: மாணவி ஜோதிஸ்ரீ தற்கொலைக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தி: மதுரை மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் மகள் ஜோதிஸ்ரீ துர்கா  தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜோதி துர்கா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவ செல்வங்கள் மன உறுதியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம். இவ்வாறு கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தி: மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி துர்கா நேற்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: