ஏரல்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சம்படி மேலத்தெருவை சேர்ந்தவர் செங்கமலம் (47). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவன் கணேசன் இறந்து விட்டார். 2 மகள்களை உறவினர் வீடுகளில் விட்டுவிட்டு மகன் கோமதிசங்கருடன் (9) செங்கமலம் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை செங்கமலம் வீட்டின் அருகே தரிசாக கிடக்கும் வயலில் ஆடைகள் களைந்த நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவலறிந்த ஏரல் போலீசார் விசாரணை நடத்தினர்.