பிரதமர் வீடு கட்டித்தரும் திட்ட முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமரின் வேளாண் மை நிதி உதவி திட்டத்தை போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன. உயிரோடு இருப்பவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் வீடு கட்டிக்கொடுத்ததாக பணம் கையாடல் செய்ததாக மட்டுமின்றி இறந்தவர் களின் பெயராலும் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஏழை, எளிய மக்களின் நலனுக்கான இத்தகைய திட்டங்களில் மனசாட்சியின்றி செய்யப்பட்ட முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்துவதையும், எடுப்பதையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும்.

Related Stories: