மும்பை: பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியாவுக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவர், ரியா போதை பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ரியா, அவருடைய தம்பி ஷோவிக் சக்கரபர்த்தி, சுஷாந்தின் மானேஜர் சாமுவெல் மிராண்டா, உதவியாளர் மிதேஷ் சாவந்த் உட்பட 6 பேரை கைது செய்து சிறையில்அடைத்தனர். இவர்கள் ஜாமீன்கோரி மும்பை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குராவ் நேற்று ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்தார்.