சென்னை: அம்மையார்குப்பம் வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள அம்மையார்குப்பத்தை சேர்ந்த முனுசாமியின் மனைவி மோகனம்மாள் (70). திருத்தணி கசவராஜ்பேட்டையில் வசித்து வருகிறார். இவர், நேற்று அம்மையார்குப்பம் இந்தியன் வங்கிக்கு சென்று அவரது கணக்கிலிருந்து முதியோர் உதவி தொகை எடுக்க வரிசையில் காத்திருந்தார்.
அப்போது, வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததாலும், வங்கி மாடி மேல் தளத்தில் இருப்பதால் குறுகிய படிகள் வழியாக சென்று வர வாடிக்கையாளர்களிடையே நெரிசல் ஏற்பட்டுள்ளது.