காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள பேக்கரியில் கேக் வாங்கி சாப்பிட்ட 3 குழந்தைகள் மயங்கிவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் ஒரு பேக்கரி உள்ளது. இங்கு 5வயதுக்கு உட்பட்ட 3 பெண் குழந்தைகள் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் திடீரென அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். உடனடியாக 3 குழந்தைகளையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.