கொழும்பு: பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவது தடை செய்யப்படும் என, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். விரைவில் பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் ராஜபக்சேவின் முடிவை ஆளும் கட்சியான இலங்கை மக்கள் கட்சி (எஸ்.எல்.பி.பி.,) எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் வரவேற்றனர். இலங்கையில் மதம் மற்றும் கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் புத்த சாசனா தலைமையிலான நாடாளுமன்றக் குழு இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.