திமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை.!!!

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக இந்த பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக துணைப் பொதுச்செயலாளராக  ஆ.ராசா,பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும், புதியதாக நியமனம் செய்யப்பட்ட துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோரை பொதுக்குழு கூட்டத்தில் புகழ்ந்து பேசினார். தொடர்ந்து, திமுக பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

Related Stories: