கடையம்: கடையம் அருகே நண்பர் உயிரிழந்த சோகத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.கடையம் அருகேயுள்ள நெல்லையப்பபுரம், அருந்ததியர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்தி (31). இவரும், அரசலூரைச் சேர்ந்த நயினார் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். வெளியூரில் தங்கி பெயிண்டிங் வேலைபார்த்து வந்தனர். இதனிடையே கார்த்திக்கு திருமணம் நிச்சய ஏற்பாடு நடந்தது. இதனால் நண்பரை பிரியவேண்டி வரும் என்று எண்ணிய நயினார் கையை பிளேடால் கிழித்து கொண்டார். இதையடுத்து பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.