மயிலாடுதுறை: கொரோனா விழிப்புணர்வுக்காக தஞ்சையில் இருந்து சென்னைக்கு டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
தமிழக தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தஞ்சையில் இருந்து சென்னைக்கு சைக்கிள் பயணம் புறப்பட்டார். தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, திருவாரூர் மாவட்ட அலுவலர் அனுசுயா, கடலூர் மாவட்ட அலுவலர் ராபின்கேஸ்ட்ரா உட்பட 50 வீரர்களும் அவருடன் செல்கின்றனர். இக்குழுவினர் மயிலாடுதுறை வருகை தந்தபோது அவர்களுக்கு எஸ்பி ஸ்ரீநாதா வரவேற்பளித்தார். பின்னர் சைலேந்திரபாபு மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.