நாசமாகும் கடம்பன்குளம் கண்மாய்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கடம்பன்குளம் கண்மாய் கரையோரங்களில் கட்டிட்ககழிவுகள் மற்றும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. தற்போது கழிவு டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கண்மாய் ஓரங்களிலும்.

சாலைகளிலும் சிலர் வீசி விட்டுச் செல்கின்றனர். ஒரு சில நேரங்களில் டயர் மற்றும் குப்கைகளில் தீமூட்டுவதால் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் டயர்களை கண்மாயில் போடுவதால் நீராதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, கடம்பன்குளம் பகுதியில் கழிவுகள் மற்றும் குப்பை, டயர்களைக் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: