ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் கோடை காலத்திற்காக தயாரிக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான காட்டன் சேலைகள், கொரோனா ஊரடங்கால் விற்பனையாகமல் தேக்கமடைந்துள்ளன.ஆண்டிபட்டி பகுதியில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், கொப்பையம்பட்டி, சண்முகசுந்தரபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் காட்டன் சேலைகளை உற்பத்தி செய்கின்றனர்.இங்கு சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன் உள்ளிட்ட பல்வேறு சேலை ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.வீடுகளில் தறி அமைத்து சேலைகளை தயாரிக்கின்றன்ர். ஒரு தறியில் ஒரு நாளைக்கு 5 சேலைகள் வரை நெசவு செய்யலாம். இங்கு தயாரிக்கப்படும் சேலைகளை தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.