ஊழியர் வீட்டில் கொள்ளை

புழல்: புழல் அடுத்த புத்தாகரம் லட்சுமி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷார்ட்ராஜ் (41). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி செல்வ ரீட்டா (38). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியை பார்ப்பதற்காக ஷார்ட்ராஜ் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சிடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 20 சவரன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: