வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரை தென்கிழக்கு நடுக்கடலில் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய பைபர் படகில் கோபி, சுகுமாரன், வேலவன், காளிதாஸ் ஆகிய 4 பேரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் வீச்சருவாள், இரும்பு ராடு போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் கோபியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.