பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம் ரோட்டோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சி வடுகபாளையத்திலிருந்து தாளக்கரை ரோடு வழியாக ஆர்.பொன்னாபுரம் கிராமத்துக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள கிணற்றில் பாதுகாப்பு கருதி மூடியோ அல்லது வலையோ அமைக்காமல் கிடப்பில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, கிராமங்களில் உள்ள திறந்த வெளி கிணறுகளில் வலைபோட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த ஊராட்சிகளுக்கு, ஊரக வளர்ச்சித்துறை மூலம் உத்தரவிடப்பட்டது.