சென்னை: பிற்பகல் 1 மணியில் இருந்து எஸ்.இ.டி.சி. பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கவிருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு பேருந்து சேவை தற்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதியிலிருந்து சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 7ம் தேதியிலிருந்து எஸ்.இ.டி.சி. பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான முன்பதிவு என்பது இன்று பிற்பகல் 1 மணியில் இருந்து தொடங்கவிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக 524 எஸ்.இ.டி.சி. பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதாவது 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாக எஸ்.இ.டி.சி. பேருந்தின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1082 பேருந்துகள் எஸ்.இ.டி.சி. - யில் செயல்பட்டு வருகிறது.