காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 55 வயதான தந்தையும் , 19 வயதான மகனும் உள்ளனர். பச்சேரகம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் கண்ணிவெடியை புதைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றுள்ளனர்.