சென்னை: பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கொரியர் பார்சல்கள் வந்தது. அந்த பார்சல் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறையினர் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தனர். 4 பார்சல்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் மற்றும் அலங்கார ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் 2 பார்சல்கள் சென்னை, ஒரு பார்சல் நாமக்கல், ஒரு பார்சல் உதகமண்டலம் முகவரிக்கு வந்திருந்தன. அந்த பார்சல்களை தனித்தனியே எடுத்து ஆய்வு செய்தனர்.