டெல்லி: இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் 18 கோடி பேர் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே பப்ஜி விளையபடுபவர்களில் 24% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பப்ஜி உள்பட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு செயலிகளால் இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என குற்றச்சாட்டு எழுந்தது.