ஈரோடு: இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, ஈரோடு மாநகரில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இ-பாஸ் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டு, இ-பாஸ் இல்லாமலேயே வாகனங்களில் அனைத்து மாவட்டத்திற்கும் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்தது.