பிரான்ஸ்: இந்திய-சீன எல்லையில் எப்போதும் ஸ்திரத்தன்மையையே சீனா பரமாரிக்க விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், இந்திய-சீன எல்லையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் பிரச்சினைகளை சீனா முதலில் ஆரம்பிக்காது. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லை இன்னமும் பிரிக்கப்படவில்லை என்பதால் இது போன்ற பிரச்சனைகள் எப்போதும் ஏற்படுகிறது. இந்திய-சீன எல்லையில் எப்போதும் ஸ்திரத்தன்மையையே சீனா பரமாரிக்க விரும்புகிறது. சூழ்நிலையை நாங்கள் முதலில் சிக்கலாக்குவதில்லை.