பெரம்பூர்: புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பீடா கடையில் கிறிஸ்டல் மெத்தனால் என்னும் போதைப்பொருள் பதுக்கி விற்பது தெரியவந்தது. அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (30) என்பதும், திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது ரபிக் (34) என்பவரிடமிருந்து இந்த போதைப் பொருளை வாங்கி விற்பனை செய்ததும் தெரிந்தது.