விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திடீரென காரில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதாவது காரில் பயணம் செய்தவர்கள் விமான நிலையத்திலிருந்து சிம்மாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து கோபாலபட்டினம் என்ற இடத்தில் காரை சிறிது நேரம் நிறுத்தி விட்டு காரில் பயணித்தவர்கள் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது காரில் திடீரென தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. ஏற்கனவே காரிலிருந்து 4 பேரும் இறங்கியதால் உயிர் சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டன.