நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்ற தீர்ப்பு செல்லும் : உச்சநீதிமன்றம்

டெல்லி : நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்ற தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என்று தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா தொடர்ந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விஜய் மல்லையா தொடர்ந்த சீராய்வு மனுவை எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்தது. ஸ்டேட் வங்கி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் மல்லையா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

Related Stories: