பஞ்சாப்பில் காலிஸ்தான் கொடியை ஏற்றியதாக டெல்லியில் 2 பேர் கைது!!

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தினத்தின் போது காலிஸ்தான் கொடியை ஏற்றியதாக டெல்லியில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிடி கர்னால் சாலையில் உள்ள ஷானி மந்திரில் மறைந்திருந்த இந்தர்ஜித் கில், ஜஸ்பால் சிங் ஆகிய இந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான காலிஸ்தான் சிந்தாபாத் படையின்  உறுப்பினர்கள் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

Related Stories: