சமக 14ம் ஆண்டு துவக்கம் நேர்மையான உழைப்பு, உறுதியுடன் இலக்கை நோக்கி பயணிப்போம்: கட்சியினருக்கு சரத்குமார் வேண்டுகோள்

சென்னை: சமக தலைவர் சரத்குமார் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 14ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கிறேன். என்னை அறியாமல் ஓர் மகிழ்ச்சி, பூரிப்பு, பிரமிப்பு, புத்துணர்ச்சி பெற்றார் போல ஓர் உணர்வு. பல சோதனைகளை கடந்து, வெற்றி, தோல்விகளை சமமாக பகிர்ந்து சோர்வடையாமல் தொடரும் நம் பயணத்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். கொரோனா தொற்றில் நம் சொந்தங்களை இழந்து தவித்து கொண்டிருக்கிறோம். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன், மன உறுதியுடன், உடல் உறுதியுடன், புதிய உத்வேகத்துடன் 14ம் ஆண்டு சிறப்பாக அமைய பாடுபடுவோம். நம் எண்ணங்கள் நம் இலக்கு வெற்றி பெற, நேர்மையான உழைப்பு அவசியம். உழைப்பும், உறுதியும் நம்மை நிச்சயம் வெற்றிபெற செய்யும் என்ற என் நம்பிக்கைக்கு உறுதுணையாக செயல்பட உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: